உலகில்
எந்த விஷயத்திற்கும் பயப்படாமல் இருக்கும் ஒருவரையாவது கண்டு இருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பயம் இருக்கும். சிலருக்கு பேயைக் காணாமலே பயம்; சிலருக்கு நாயைக் கண்டால் பயம்; பலருக்கு மனைவியை நினைத்தாலே பயம். இப்படி பயமானது பல வகைப்படுகிறது.
எனக்கு பிடித்த,தோன்றிய என்னை பாதித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு எளிய முயற்சி
August 03, 2012
June 24, 2012
உன் கல்லறையில் எச்சில் துப்புகிறேன் ( I SPIT ON YOUR GRAVE ) - ஒரு பாதிப்பு-
” ஒரு ஓவியன். ஒரு காட்சியைப் பார்க்கிறான். அந்த காட்சியை அப்படியே வரைவது ஓவியம் அல்ல. அந்த காட்சி அவன் மனதில் எழுப்பிய எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அவன் வரையும் ஓவியம் இருக்க வேண்டும் “ – பிக்காஸோ ( உலகப் புகழ் பெற்ற ஓவியர் ).
இந்த பதிவானது நான் இன்று பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தைப் பற்றியது. மேலே நான் மேற்கோள் காட்டியிருக்கும் பிக்காஸோவின் வரிகளை மீண்டும் வாசியுங்கள். அது ஓவியத்திற்கு மட்டுமல்ல. திரைப்படத்திற்கும்தான்.
June 18, 2012
அதீத மனிதர்கள் (Superhumans) - 1
நம்மை படைத்தது யார்? கடவுளா ? அல்லது டார்வின் கூறுவது போல் இயற்கையா? இந்த கேள்வி உங்களில் பலருக்கு தோன்றியிருக்கக்கூடும். இது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும், ஏன் இந்த உலகத்தில் மனிதன் தோன்றிய காலந்தொட்டே அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் மிக பழமையான விடைத் தெரியாத வினா இது. உலகெங்கும் கடவுளை எதிர்ப்பவர்களும், கடவுளை ஆதரிப்பவர்களும் கணிசமாக இருக்கின்றனர். எனினும் நம்மை தாண்டி நமக்கு கட்டுப்படாத ஒரு சக்தி இருப்பதை பெரும்பாலானோர் ( சில விஞ்ஞானிகள் உட்பட! ) ஒப்புக் கொண்டுள்ளனர்.
June 15, 2012
June 01, 2012
மனிதனும் மர்மங்களும்
மனிதனும் மர்மங்களும். இந்த புத்தகத்தைப் படித்து உள்ளீர்களா ? இல்லை என்பது உங்கள் பதிலாயிருந்தால் இந்த பதிவை வாசித்த பின்னர் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் அந்த புத்தகத்தை வாங்கி வாசிப்பதுதான். எனக்கு பிடித்த கிழக்குப் பதிப்பகமும், எனது வணக்கத்திற்குரிய எழுத்தாளர் மதன் அவர்களும் இணைந்த ஒரு புள்ளிதான் மனிதனும் மர்மங்களும்.
May 31, 2012
வாழ்க தமிழ் !
நமது தாய்மொழி என்ன ? ” இதென்ன கேள்வி ! தமிழ்தான் “ என்று நீங்கள் பெருமையுடன் கூறலாம். இன்று தமிழ்நாட்டில் தமிழின் பெருமை பரவலாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. தமிழைக் காக்கவென்றே ஒரு கூட்டமும் இருக்கிறது. எனினும் நம்மில் எத்தனை பேர் தாய்மொழியான தமிழ் வழிக்கல்வியை ஆதரிக்கிறோம் ? எளிதாக எண்ண முடிந்த சிலரே.
May 30, 2012
இது ‘ஆனந்த’மான தருணம்...
மே 30, 2012. வரலாறு தன்னை மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொண்டது. இந்தியாவிற்கு இது ‘ஆனந்த’மான தருணம். ’64 கட்டங்களின் அரசர்’ என்று அழைக்கப்படும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் தனது உலக சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து ஆனந்த் வெல்லும் நான்காவது பட்டம் இது.
April 29, 2012
இந்தியாவின் அக்னி.....
வெற்றி! வெற்றி!.... பழைய கால தமிழ் படங்களின் தொடக்க வசனம் இதுதான். அக்னி – 5 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய இந்தியாவின் குரலும் இதுதான். சமீபத்தில் ஏப்ரல் 19, 2012 அன்றுதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தேறியது. அக்னி வரிசையில் இந்தியாவின் ஐந்தாவது படைப்பு அன்றுதான் முதன் முறையாக சோதனை செய்யப்பட்டது ( அதுவும் வெற்றிகரமாக….). அந்த இனிய வியாழக்கிழமை சரியாக 8 மணி 7 நிமிடங்கள் வாக்கில் அக்னி – 5 செந்நிற பிழம்பை கக்கிக் கொண்டு வானில் பறந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழித்தது.
April 06, 2012
வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்.....
வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் எது தெரியுமா? அது மற்றவர்களுக்கு உதவி செய்வதினால் ஏற்படும் மகிழ்ச்சி நிறைந்த கணம் தான். உதவி பெற்றவர் மனம் உவந்து பாராட்டும் அந்த இனிமையான வார்த்தைகளே மிக சிறந்த பதங்களாகும். உதவியை பற்றிய ஒரு சிறிய கதை…..
February 05, 2012
மாறுபட்ட சிந்தனை-2
சரி. மாறுபட்ட சிந்தனைத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?
அது ஒன்றும் கடினமான செயல் அல்ல. அதற்குரிய முக்கியத் தேவை கற்பனை வளம். கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ள நீங்கள் ஒவியனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எட்வர்ட்-டி-போனொவை பொருத்தவரை அறிவுத்திறமை என்பது உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு சக்தி. சிந்தித்தல் என்பது அதை வெளிக்கொணர உதவும் ஒரு கருவி.
கற்பனை வளமும் அப்படியே.
February 04, 2012
மாறுபட்ட சிந்தனை-1
மாற்றம். ”நமக்கு ஒரு மாற்றம் தேவை” என்ற கருத்தை வலியுறுத்திதான் அமெரிக்காவில் ஆட்சியை பிடித்தார் ஒபாமா. இன்றைய உலகில் வெற்றிப் பெற மாற்றம் என்பது ஒரு அத்தியாவசியமான தேவை. அது சிந்தனையிலும் கூடத்தான். மாறுபட்ட சிந்தனை இருந்தால் ஒருவரால் உலகையே மாற்றி அமைக்க முடியும். அதை பற்றியே இந்த பதிவு.
மாறுபட்ட சிந்தனை என்றால் என்ன?
கல்வியாளர்களே கவனியுங்கள்...
இது மாணவர்களுக்காக….. நாம் அனைவரும் கற்கும் கல்வி அடிப்படையில் மிகவும் தவறான முறை ஆகும். யாரும் கல்வி கற்பதை அறிவை வளர்ப்பதாக நினைத்து கொள்வதில்லை. எல்லாமே இங்கே ஒரு லாப நஷ்ட கணக்குதான்.தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் மாணவர்களை ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாகவே மாற்றிவிட்டது. என்னை பொருத்தவரை இன்று கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் திட்டமிட்டு முட்டளாக்கப்பட்டவர்கள்.இந்த அவசர உலகில் யாரும் நிதானமாக இதை பற்றி ஒரு நொடி கூட யோசிக்க தயாராய் இல்லை என்பது ஒரு வெட்கக்கேடான விஷயம்.ஒவ்வொருவரும் குழந்தைகளின்
February 02, 2012
அறிமுகம்....
இந்த பதிவுலகிற்கு நான் புதியவன் அல்ல. எனக்கும் சொந்தமாக ஒரு சிறிய தளம் இருந்தது.இனி நான் எனது சிந்தனைகளை இங்கு பதிவு செய்ய உள்ளென் என்பதை இங்கு முதல் பதிவாக இடுகிறேன்.....
Subscribe to:
Posts (Atom)